லெப். கேணல் யோகா, லெப். கேணல் பவா வீரவணக்க நாள் இன்றாகும்.
20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் தேசவிரோதிகள் (கருணா குழு) மேற்கொண்ட “கிளைமோர்” தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பவா / தயாசீலன், ‘மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளர்’ லெப். கேணல் யோகா ஆகிய மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!


தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”