கரும்புலி மேஜர் சிற்றம்பலம், கரும்புலி கப்டன் விஜயரூபன், கரும்புலி கப்டன் நிவேதன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
தமிழீழத்தின் தலைநகர் திருமலை சீனன்குடா விமானத்தளத்தில் ஊடுருவி 06.03.1997 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலில் வை-12 ரக விமானத்தையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் தகர்த்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சிற்றம்பலம், கரும்புலி கப்டன் விஜயரூபன், கரும்புலி கப்டன் நிவேதன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”