சிங்கள ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்த வன்னியை ஊடறுத்து யாழ்
குடாநாட்டுக்கு பாதையமைக்க சிங்கள அரசு மேற்கொண்ட ஜெயசிக்குறுய்
இராணுவ நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள் இது புலிகளின்
இராணுவ வெற்றி சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கிலான முயற்சியை
தோற்கடித்த விடுதலைப்புலிகள் சமாதான முயற்சி வாயிலாக மக்களின்
போக்குவரத்துக்கு பாதை திறந்தனர். அப் பாதை வழியே யாழ் சென்ற
புலிவீரர்களை மக்கள் வெள்ளம் அன்புப் பெருக்கில் ஆரவாரித்து
வரவேற்றது. இது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் வெற்றி.
தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்