லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்க நாள் இன்றாகும்
15.07.1983 அன்று யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா இராணுவத்தினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சில் குண்டுபாய்ந்த வேளையில் எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும், துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் கூறி தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தம்மை சுடுவித்து, வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமாகிய லெப்டின்னன்ட் சீலன் / ஆசீர், வீரவேங்கை ஆனந் ஆகிய மாவீரர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்பட்ட லெப். சீலன் அவர்கள் நினைவு சுமந்த நிகழ்வுகளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மற்றும் தளபதிகள்போராளிகள் ……!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”