லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டது.
தாயக மண் மீட்பு போரிலே விழுப்புண்ணடைந்த (அங்கவீனமான) போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஓர் நிர்வாக கட்டமைப்பு ஆகும். லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர்.
இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ தேசிய விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தொடர்ச்சியான தேச விடுதலைக்காக தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் எனும் பெரும் ஆவலுடன் தொடர்கின்றனர் தங்கள் பயணத்தை…