வரலாறு மனிதர்களைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கின்றது.
ஆனால்
சில மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கப்
பிறப்பெடுக்கின்றார்கள்.
‘பிரபாகரன்’ என்பது தனிமனிதனின் பெயர் அன்று.
அது ஒரு வரலாற்றின் பெயர்:
அந்த மனிதரே படைக்கின்ற வரலாற்றின் பெயர்.
தமிழ் தேசிய இனத்தின் –
இன்றைய கால வரலாற்றினதும்
எதிர்கால வரலாற்றினதும் பெயர்.
‘பிரபாகரன்’ என்றால்
அடிமை மனோபாவத்திற்குட் புதைந்துபோய்க் கிடந்த தமிழினம்
கௌரவமும் கர்வமும் மிக்க இனமாக நிமிர்ந்தெழுந்த வரலாறு!
வரலாறு என்பது வளர்ந்தே செல்வது.
அது முடிவற்றது.
இல்லாமையற்றது.`
பிரபாகரன்’ என்பது முதிர்ந்தே செல்வது –
அது அகவையற்றது:
முதுமையற்றது.
மூல விதையென உன்னையே இட்டு – தமிழினத்தின்
வீர வரலாறென உருவெடுக்கும் தலைவா!
கோல அழகென உயர்வோடு வாழ்வாய் –
தமிழீழத்தின்
,நிழலாக – பலமாக –கம்பீரமாக!
– ஆக்கம் :உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
World Tamil Coordinating Committee
ஐக்கிய அமெரிக்கா-the united states America
மையப்பணிமனை
நியூயோர்க்
20.11.2004
விடுதலைப்பேரொளி நூலிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”