தமிழீழ விடுதலை ஒன்றே எமது இனத்தின் மரபு வழி விடியலாகும் என்னும் உயரிய இலட்சியத்தை எமக்குள் புகுத்தி மரபுவழி இராணுவம்மைத்து லெமுரியா கண்டத்தின் இக்கால எச்சங்களான தமிழீழத்தை உருவாக்கியவர் தாயக விடுதலைப் போரை எங்களுக்கு வழிக்காட்டும் எங்கள் தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள் இன்று தனது 64 வது அகவையில் காலடி வைக்கிறார். பெரும் நெருப்பாறுகளைக் கடந்து வீர வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு தமிழ் தேசிய ஆவணக்கீற்றாகிய வேர்கள் இணையம் தனது அகவை நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.
உலகெங்கிலும் தமிழர்கள் இருந்தாலும் தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் ஒருவரே எம்இனம் முழுவதற்குமான ஒரே முகவரி
இன்று தமிழீழத்தேசியத் தலைவரின் ஒரு சிறு குரல் வந்தாலே போதும் இந்த இனத்துக்கு இப்போது நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து அநீதிகளும்,அவமானப்படுத்தல்களும் ஒரு கணத்தில் மறைந்துவிடும்
தலைவா!! தமிழினம் உங்களையும் நீங்கள் உருவாக்கிய புலிப்படையும் நம்பி இருக்கின்றது.நீங்கள் காட்டும் வழியில் வெற்றி நடைபோடுகிறது.
உங்களது கட்டளைக்கு தமிழினமே காத்துக்கொண்டுள்ளது .
உங்களை வாழ்த்த வயதில்லை இருப்பினும் வாழ்க வளமுடன் என வாழ்த்தி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதமும் பூரிப்புமடைகிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-நிர்வாகம்
வேர்கள் -தமிழீழத் தேசிய ஆவணக் கீற்று
தமிழீழம்.